×

42வது நினைவு நாளில் கண்ணதாசன் சிலைக்கு மரியாதை

திருப்புத்தூர், அக்.18: திருப்புத்தூர் அருகே கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று அவர் சிலைக்கு பல்வேறு அமைப்புக்களின் சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி கிராமத்தில் கவிஞர் கண்ணதாசன் பிறந்தார். இவரது 42வது நினைவு நாளையொட்டி நேற்று சிறுகூடல்பட்டியில் நிறுவப்பட்டிருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயளாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் சோலையப்பன் கண்ணதாசன் குறித்து கவிதைத் தொகுப்பினை வாசித்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மாவட்ட இணைச் செயலாளர் மருதுபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்ணதாசன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

The post 42வது நினைவு நாளில் கண்ணதாசன் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kannadasan ,Tiruputhur ,Tiruputur ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு