அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேலாயுதம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் கோயமுத்தூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அங்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் கடந்த 8ம் தேதி அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைகாக திருச்சி அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவர் உயிரிழந்தார்.
The post அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி appeared first on Dinakaran.