ஜெயங்கொண்டம்:அரசு மேல்நிலைப்பள்ளி கோடாலி கருப்பூரில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் அடிப்படை இயந்திரவியல் பிரிவு உள்ளது. இப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அக பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த அக பயிற்சியானது மொத்தம் 80 மணி நேரங்கள் நடைபெற உள்ளது. தொழிற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் தனராசு ஆகியோர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளி கோடாலிகருப்பூர் தொழிற்கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள நிறுவனங்களில் அக பயிற்சி ஆனது 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது ஜெயங்கொண்டத்தில் உள்ள இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
The post அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் தொழில் துறையில் அகப்பயிற்சி appeared first on Dinakaran.