×

திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்

திருச்சுழி, அக்.18: திருச்சுழி அருகே பி.புதுப்பட்டியில் பாலகிருஷ்ணன் சுவாமி 144வது ஆண்டு உற்சவ விழா கொண்டாடப்பட்டது. திருச்சுழி அருகே புதுப்பட்டியில் அமைந்துள்ள பழமையான பாலகிருஷ்ணன் சுவாமி கோவில் 144வது ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக முத்தாலம்மனுக்கு மஞ்சள், பால் அபிஷேகத்துடன் விழா தொடங்கப்பட்டது. இரண்டாவது நாள் சக்தி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் பொங்கல் வைபவம் நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பாலகிருஷ்ணன் சுவாமி மற்றும் இதர தெய்வங்கள் தேர்பவனியாக ஊர்வலமாக சென்று வீர வந்தம்மன் கோவிலில் வந்தடைந்தும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Mulaipari ,Thiruchuzhi ,Balakrishnan Swamy ,144th Utsava Festival ,B. Budhupatti ,Pudupatti ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...