×

ஜல்லி கற்களை கொட்டியபோது டிரான்ஸ்பார்மரில் உரசியது டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு: டயர்கள் வெடித்து சிதறின

 

திருச்சுழி, அக்.18: நரிக்குடி அருகே சாலை பணிக்காக ஜல்லிகற்கள் கொட்டிய டிப்பர் லாரி மீது மின் வயர் உரசி டயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது. நரிக்குடி அருகே உள்ள எழுவணியிலிருந்து ரெட்டைகுளம் வரை சுமார் 3 கிமீ தூரம் உள்ள சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டுவரப்படுகின்றன.

நேற்று எழுவணி அழகு நாச்சியம்மன் கோயில் அருகே டிப்பர் லாரியில் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கற்களை, முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் சரவணகுமார், ஜாக்கியை தூக்கிக்கொண்டு கொட்டினார். அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் வயரில் டிப்பர் உரசியதில், மின்சாரம் பாய்ந்தது. இதில் லாரியின் முன் பக்க இரு டயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. டிரைவர் சரவணகுமார் பலத்த காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காண்ட்ராக்டருக்கு

The post ஜல்லி கற்களை கொட்டியபோது டிரான்ஸ்பார்மரில் உரசியது டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு: டயர்கள் வெடித்து சிதறின appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Narikudi ,Dinakaran ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...