×

திருக்கழுக்குன்றம் அருகே குடிசை இடிந்து வயதான தம்பதி, மகன் படுகாயம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (65). இவரது மனைவி யசோதா (60). இவர்களது மகன் ஐயப்பன் (23) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தங்களது பழமையான குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக இவர்களது குடிசை வீட்டின் மண் சுவர் ஈரமாகி இருந்தது. இதனால், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த பழமையான பெரிய மண் சுவர் திடீரென தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலை உள்ளிட்ட 3 பேர் மீதும் இடிந்து விழுந்தது. இதில், 3 பேரும் சுவற்றின் இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். 
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேர் மீதும் விழுந்த மண் சுவற்றை நீண்ட நேரம் போராடி அகற்றி காப்பாற்றினர். மேலும், அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு 3 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த வருவாய் துறையினர்  சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளனர். தந்தை, தாய், மகன் மீது பெரிய சுவர் விழுந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருக்கழுக்குன்றம் அருகே குடிசை இடிந்து வயதான தம்பதி, மகன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Eyumalai ,Thirukkalukunram Paramasivan Nagar ,Yashoda ,Ayyappan ,Padukayam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை எதிரொலி...