×

சுசீந்திரம் அருகே 2குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சுசீந்திரம், அக்.18 : சுசீந்திரம் அருகே பறக்கை சிடிஎம்.புரத்தை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரண்யா(28). தம்பதிக்கு 5 வயதில் மகள், 2 வயதில் மகனும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 13ம் தேதி சரண்யா தனது 2 குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை. கணவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுயம்புலிங்கம், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை. இதையடுத்து அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சுசீந்திரம் அருகே 2குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Suchindram ,Swayambulingam ,Philai ,CDM Puram ,Saranya ,Suseendram ,Dinakaran ,
× RELATED திருப்பணிசெட்டிகுளத்தில் கிராமசபை கூட்டம்