×

செல்போன், ரூ.500க்காக கிரேன் ஆபரேட்டர் கல்லால் தாக்கி கொலை: வழிப்பறி கொள்ளையன் கைது

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் பெரியபாளையத்தை சேர்ந்த பாபு (35) என தெரிய வந்தது. இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

தொடர்ந்து, போலீசார் சாலையோர கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், இதயராஜ் (27) என தெரிய வந்தது. சம்பவம் நடந்த அன்று நடந்து சென்ற பாபுவை மறித்து அவரிடம் இருந்த செல்போன், ரூ.500 பறித்துக்கொண்டு அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது. எனவே, பொன்னேரி போலீசார் வழிப்பறி கொள்ளையன் இதயராஜை கைது செய்தனர். பிறகு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post செல்போன், ரூ.500க்காக கிரேன் ஆபரேட்டர் கல்லால் தாக்கி கொலை: வழிப்பறி கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Crane ,Ponneri ,Krishnapuram ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...