×

150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

பொன்னேரி: மீஞ்சூரில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மீஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஞானமணி வரவேற்றார். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மேற்பார்வையாளர் ஜமுனா ராணி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு வளைகாப்பை தொடங்கி வைத்தார். இதில், 150 கர்ப்பிணிகளுக்கும் அவர்களின் உறவினர்களின் முன்பு சீர்வரிசைகளோடு சந்தனம் திலகமிட்டு மாலை அணிவித்து வளையல்கள் போடப்பட்டு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அத்திப்பட்டு அலமேலு அம்மாள், விஜயலட்சுமி, மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், அறங்காவலர் ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர் அபூபக்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் தன்சிங், அன்பு, நந்தியம் கதிரவன், சாம்ராஜ், சவுரிராஜன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Meenjoor ,Meenjur ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் வாலிபர் கொலையான...