×

சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள கனிஸ்கர் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்

விருதுநகர்: சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கபாளையம் கனிஸ்கர் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்திருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் பொன்னுத்தாய், சின்னதாய் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த ஆலையின் அறைக்குள் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. தயாரித்த பட்டாசுகளை வெடித்துப் பார்த்து சோதனை நடத்திய போது அருகில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கடையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள கனிஸ்கர் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Kaniskar Firecracker Factory ,M. Budhupatti, Sivakasi ,Virudhunagar ,Rengapalayam Kaniskar ,firecracker ,factory ,M. Pudhupatti, Sivakasi ,Kaniskar ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...