×

சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி

விருதுநகர்: சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மாறனேரி மற்றும் எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மாறனேரியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளதாகவும், எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாறனேரி பட்டாசு ஆலையில், வெடி மருந்துக்கான ரசாயன மூலக்கூறுகளை தொழிலாளர்கள் தயார் செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்ட அறையில் 5 பேர் வேலை செய்துகொண்டிருந்ததாகவும், வெடி விபத்தி வேம்பு என்பவர் பலியானதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. தொடந்து வெடிவிபத்து நிகழ்ந்த அறையில் 3 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு குடோனில் தயாரித்த பட்டாசு ஆலை வெடித்து பார்த்து சோதனை நடத்திய போது அருகில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியதாக தகவல் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு குடோனில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டிருப்பதால் மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்திருப்பதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் கட்டுபாடுகள் முறையாக பின்பற்றபடுவதாகவே கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் பட்டாசு விற்பனை சற்று மந்த நிலையிலேயே உள்ளது. இருப்பினும் தீபாவளி நெறுங்குவதால் உற்பத்தியை அதிகரித்து கூடுதல் பட்டாசுகளை தயாரிக்க வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கள் தொடர்கிறது.

The post சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Firecracker factory ,Sivakasi ,Virudhunagar ,Maraneri ,M. Pudhupatti ,Firecracker ,Dinakaran ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்