×

மின்சாரம் பாய்ந்து செக்யூரிட்டி பலி

சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்த சக்திவேல் (50), மந்தைவெளியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, நேற்று காலை வீட்டிற்கு செல்ல, மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு சென்றார். பணிமனை அருகே உள்ள சிக்னலை கடக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பட்டினப்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மந்தைவெளி சிக்னல் அருகே உள்ள மின் இணைப்பு பெட்டியில் மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டு, இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. …

The post மின்சாரம் பாய்ந்து செக்யூரிட்டி பலி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sakthivel ,Tiruvallikeni ,Manthaiveli ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...