×

ஒன்றிய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

ஜெயங்கொண்டம், அக்.17: 100 நாள் வேலைத் திட்டத்தை சீரழிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், அன்பழகன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மாதர் சங்க மாவட்ட செயலாளர் அம்பிகா மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் மீனா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சிவசங்கரி ரவீந்திரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

கடந்த மூன்று மாதங்களாக கொடுக்கப்படாத ஊதியத்தை கால தாமதமாக கொடுக்கும் ஊதியத்திற்கும் வட்டி சேர்த்து வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைவருக்கும் 100 நாட்கள் முடியும் வரை தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். ஆதார் லிங்க் என பல்வேறு குறை கூறி வேலைக்கு வரும் ஆட்களை குறைப்பதை நிறுத்த வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் ஊதியம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். 200 நாட்கள் வேலை தினக்கூலி ரூ-600 வழங்கவும் வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Jayangkond ,Jayangondam ,India ,Union Government ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்