×

பாபநாசத்தில் உலக திருக்குறள் மைய மாதாந்திர கூட்டம்

 

கும்பகோணம், அக்.17: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உலக திருக்குறள் மையத்தின் மாதக் கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் சன்னதி தெருவில் உலக திருக்குறள் மையத்தின் நடைபெற்ற 293வது மாதக் கூட்டத்திற்கு சங்கர் தலைமை வகித்தார். ஆசிரியர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். கோடையிடி குருசாமி வரவேற்புரை ஆற்றினார். பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன் கலந்து கொண்டு “திருக்குறள் காட்டும் அரசியலதிகாரம்” என்ற தலைப்பில் பேசினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற தலைமையாசிரியர் ரமேஷ் பாராட்டப்பட்டார். மைய செயலாளர் செயராமன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் அசோக், கமலஹாசன், ராஜேந்திரன், சுரேஷ், கலைச்செல்வன், கீர்த்தனா, சுமதி, ரவி, பத்பநாபன், ஆசைத்தம்பி, அன்பழகன், பூர்ணிமா ஆகியோர் மற்றும் பொதுமக்கள், திருக்குறள் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

The post பாபநாசத்தில் உலக திருக்குறள் மைய மாதாந்திர கூட்டம் appeared first on Dinakaran.

Tags : World Thirukkural Center ,Papanasam ,Kumbakonam ,Papanasam Shrine Street… ,World ,Thirukkural ,Center Monthly Meeting ,Babanasam ,
× RELATED பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்