- சுவாமி தசரா குழு
- காளி பூஜை
- நாகர்கோவில்
- 13ம் ஆண்டு காளி பூஜை
- மன்னராஜ சுவாமி தசரா குழு
- அஞ்சுகிராமம் லெட்சுமிபுரம்
- ஆண்டு காளி பூஜை
- மன்னராஜா சுவாமி தசரா குழு
- தின மலர்
நாகர்கோவில், அக். 17 : அஞ்சுகிராமம் அருகே லெட்சுமிபுரம் மன்னராஜா சுவாமி தசரா குழு சார்பில் 13ம் ஆண்டு காளிபூஜை விழா நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு செண்டை மேளம், 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடந்தது. பகல் 12 மணிக்கு மன்னராஜா சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராடுதல், 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு செண்டை மேளம், இரவு 7 மணிக்கு வத்தல் யாகம், 8 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு காளி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜேந்திரன், டாக்டர் அங்கயற்கண்ணி, ஷேக் சிக்கந்தர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
The post மன்னராஜா சுவாமி தசரா குழுவின் 13ம் ஆண்டு காளி பூஜை appeared first on Dinakaran.