திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கிளை தலைவர் மதுக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ராம்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட மருந்துகளுக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கான மருந்து கொள்கைகளை அமலாக்க வேண்டும். மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான வேலை தன்மையை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
The post மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.