×

சந்திர கிரகணம் எதிரொலி அழகர்கோயில் நடை அக்.28ல் அடைப்பு

அழகர்கோவில், அக். 17: அழகர்கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் நடை அக்.28ம் தேதி அடைக்கப்பட உள்ளது. இதுகுறித்து கோயில் துணை ஆணையர் ராமசாமி வெளியிடுள்ள அறிக்கை: அக் 28ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அழகர்கோயில் மற்றும் இக்கோயிலின் உபகோயில்களான அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், தல்லாகுளம் அய்யப்பன் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில், மேலூர் ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றில் மாலை 6 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். இக்கோயில்களில் அக்.29ம் தேதி காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு கிரகண தோஷ நிவர்த்திக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சந்திர கிரகணம் எதிரொலி அழகர்கோயில் நடை அக்.28ல் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Lunar eclipse reverberation Alagharkoil walk ,Alagarkoil ,Sundararaja Perumal temple ,Alaghar temple ,
× RELATED இன்று தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை...