×

வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாச்சாத்தி மலை கிராம மக்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்டம் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உறுதி செய்தது. நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும் வாச்சாத்தி கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ். அதிகாரி எல்.நாதன், பாலாஜி ஆகியோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.

 

The post வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Vachati ,Supreme Court ,Delhi ,Vachathi ,Wachati Mountain ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...