×

மகாராஷ்டிராவில் அகமதுநகர்-ஆஷ்தி பகுதிக்குச் சென்ற புறநகர் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகளில் தீ விபத்து

மும்பை: மகாராஷ்டிராவில் அகமதுநகர்-ஆஷ்தி பகுதிக்குச் சென்ற புறநகர் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் தீ பிடித்ததை அடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்

மகாராஷ்டிராவில் நியூ அஷ்டியில் இருந்து அகமதுநகர் நோக்கிச் சென்ற உள்ளூர் ரயிலின் ஐந்து பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மாலை 3 மணியளவில் நாராயண்டோ மற்றும் அஹமத்நகர் பிரிவுகளுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, வேகமாக அருகில் இருந்த நான்கு பெட்டிகளுக்கும் பரவியது. இருப்பினும், தீ மேலும் பரவுவதற்குள் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து வெளியேறினர்.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. தீ பரவுவதற்குள் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கியதால், இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

The post மகாராஷ்டிராவில் அகமதுநகர்-ஆஷ்தி பகுதிக்குச் சென்ற புறநகர் ரயிலில் அடுத்தடுத்து 5 பெட்டிகளில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Ahmadnagar-Ashti ,Maharashtra ,Mumbai ,Dinakaraan ,
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி