×

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால், தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு

திருப்பூர்: தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால், தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம் என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை 3ம் கட்ட பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். இதில் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். அண்ணாமலையில்ன் 3வது கட்ட பாதயாத்திரை தொடக்க விழாவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்; பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்கும் கொண்டு செல்கிறார். தமிழகத்தின் வளர்ந்த கலாச்சாரத்தை பற்றி இந்த நாடே பெருமைப்படுகிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என பிரதமர் உறுதிமொழி எடுத்துள்ளார். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க முனைப்போடு உள்ளார். பாரதத்தை துண்டாட “இந்தியா” என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளனர். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். பிரதமர் நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால், தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம். வளர்ச்சி வேண்டும் என்றால் தாமரைக்கு வாக்களியுங்கள், அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக தமிழ்நாட்டிற்கான வளர்ச்சியை கொடுக்கும் என கூறினார்.

The post தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால், தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Union Minister ,Piyush Goyal ,Tirupur ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...