×

திருப்பூரில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம், கொழுமம் பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் முரளி ராஜா, த/பெ.மன்மதன் (வயது 35), கௌதம், த/பெ.சின்னதேவன் (வயது 29) மற்றும் மணிகண்டன், த/பெ.பாபு (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து,

உடுமலைப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post திருப்பூரில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Chief Minister ,Muhammed ,c. Stalin ,Tirupur ,Muhammed Muhammed ,Tirupur district ,c. ,Stalin ,Muhammadinejad c. Stalin ,Dinakaraan ,
× RELATED மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி