ராசிபுரம்: வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். இதையடுத்து, ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமையில், அத்தனூர் பேரூர் செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் முன்னிலையில், இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், துணை அமைப்பாளர் வசந்தகுமார், தமிழ்ச்செல்வன், அருள் பிரகாஷ், சீனிவாசன், வார்டு செயலாளர் முத்துசாமி, ரவி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞரணி சார்பில், மூலக்காடு ஊராட்சியில் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர்கள் அருள்முருகன், தினேஷ்குமார், வித்யாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.