×

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

 

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில், புரட்டாசி மாத 10 நாள் திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வந்தார். தினமும் திருஏடு வாசிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை – உகப்படிப்பு நடைபெற்றது.

பின்னர் தேர் அலங்காரம் செய்தல் பணிவிடை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடை கொண்ட தேரில் எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார். தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் எம்பி ஜெயதுரை, ஞானதிரவியம் எம்பி, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் செல்வராஜ்குமார், பிரைட் முருகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆதி குருசாமி,

சந்திரசேகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

The post மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ayya Vaikunda Dharmapati Temple ,Manali Pudunagar ,Thiruvotiyur ,Aya Vaikunda Dharmapati Temple ,festival ,month ,Puratasi ,Chariot ,
× RELATED 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பொது...