- இளைஞர் எழுச்சி நாள்
- Abdulkalam
- தஞ்சாவூர்
- ஜனாதிபதி
- பாரத் ரத்னா
- நிர்வாகி
- குழு
- இளைஞர் எழுச்சி தினம் பே
- தின மலர்
தஞ்சாவூர்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா டாக்டர் அப்துல்கலாம் 92வது பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் பிரிவு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது. பேரணியை உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வகுத்த கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
The post மாநில நிர்வாக குழு கூட்டத்தில் கோரிக்கை அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்எழுச்சிநாள் பேரணி appeared first on Dinakaran.