×

களக்காடு அருகே மண் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல்

களக்காடு: களக்காடு அருகே மண் கடத்திய 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். களக்காடு அருகே மேலக்கருவேலங்குளம்-மஞ்சுவிளை சாலையில் களக்காடு கிராம நிர்வாக அதிகாரி துரைபாண்டி மற்றும் வருவாய்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குளத்து மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி சீட்டில் நேரத்தை மாற்றி எழுதி மோசடி செய்து, மண் கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர்கள் டிரைவர்கள் மஞ்சுவிளையை சேர்ந்த பால் மாணிக்கம் மகன் பாலமுருகன், வெள்ளசாமி மகன் கதிரேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே மண் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kalakat ,Kalkakan ,Kalkakat ,Malkaruvelungalam-Manchuvilela road ,Kalkakaru ,Dinakaraan ,
× RELATED இலவச மருத்துவ முகாம்