×

ஒருதலை காதல் விவகாரம் மாணவியை கொன்ற தாய்மாமன் தற்கொலை

நாட்றம்பள்ளி: ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்ற தாய்மாமன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி, பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜ் மகன் சரண்ராஜ்(38). இவர் டிரைவர் மற்றும் போட்டோகிராபராக இருந்தார். இவர் தனது அக்கா மகளான ஜீவிதாவை கடந்த 4 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சரண்ராஜ், தனியாக இருந்த ஜீவிதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாராம். அதற்கு, அவர் மறுக்கவே ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து சரண்ராஜை தேடி வந்தனர். நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் டீக்கடையில் பதுங்கியிருந்த சரண்ராஜை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, சரண்ராஜ் மயங்கி சாய்ந்துள்ளார். உடனடியாக அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது, சரண்ராஜ் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்ராஜ் நேற்றிரவு உயிரிழந்தார்.

The post ஒருதலை காதல் விவகாரம் மாணவியை கொன்ற தாய்மாமன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Tirupattur ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...