×

ரயிலில் ஓசியில் பயணம்; ரூ.20 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக அக். 12ம் தேதி 539 டிக்கெட் சரிபார்ப்புப் பணியாளர்களைக் கொண்ட குழு, அன்று ஒரே நாளில் ரூ.20.19 லட்சம் அபராதம் விதித்து புதிய சாதனை படைத்துள்ளது, இது 2023-2024ம் நிதியாண்டில் அதிகபட்சம். கடந்த அக்.12ம் தேதியன்று பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் மொத்தம் 4,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக 1,934 பேரிடம் ரூ.10.25 லட்சம், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 1,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.8.41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

The post ரயிலில் ஓசியில் பயணம்; ரூ.20 லட்சம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : OC ,Chennai ,Southern Railway ,Chennai Railway Division ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...