×

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 2 நாட்களுக்கு மண்டலம்-13, 14 மற்றும் 15க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 17ம் தேதி காலை 9 மணி முதல் 18ம் தேதி காலை 9 மணி வரை மண்டலம்-13, 14 மற்றும் 15க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

மண்டலம் 13 (அடையாறு) தரமணி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, திருவான்மியூர், வேளச்சேரி இந்திரா நகர் மண்டலம் 14 (பெருங்குடி) கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் மண்டலம்15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் ஒக்கியம்-துரைப்பாக்கம்

The post அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Adyar ,Perungudi ,Choshinganallur ,CHENNAI ,Nemmeli ,-13 ,14 ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...