×

சுங்கத்துறை பணி போட்டித் தேர்வில் கடந்த காலங்களில் முறைகேடு நடந்ததா என விசாரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுத்துறைகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50%, கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, கடந்த காலத்தில் நடந்த தேர்வுகளிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post சுங்கத்துறை பணி போட்டித் தேர்வில் கடந்த காலங்களில் முறைகேடு நடந்ததா என விசாரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Bamaga ,Ramadoss ,Chennai ,Union Government Departments ,Tamil Nadu ,
× RELATED திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி