×

நிதிசார் கொள்கை விழிப்புணர்வு முகாம்

வருசநாடு: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நிதிசார் கொள்கை விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அழகு சிங்கம் தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நல்லாசிரியர் கோவிந்தன் சிறப்புரை ஆற்றினார். கிளை மேலாளர் ஆறுமுக பெருமாள், தமிழ்நாடு கிராம வங்கி உதவி மேலாளர் சந்திரலேகா, பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவர்கள் வங்கியில் எவ்வாறு வரவு செலவு வைப்பது, எவ்வாறு வாழ்க்கையில் உயர்ந்து வருவது உள்ளிட்ட சிறப்பு விழிப்புணர்வு மூலம் தெளிவுபடுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

The post நிதிசார் கொள்கை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Policy Awareness Camp ,Varusanadu ,Kadamalaikundu Government Higher Secondary School ,Tamil Nadu Grama Bank ,Fiscal Policy ,Awareness Camp ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்