×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில், சௌமிய நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 வைணவ தளங்களில் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை உற்சவ பெருமாளுக்கும், தேவி, பூமாதேவியருக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thirkoshtiyur Perumal temple ,Tiruputhur ,Soumya Narayana Perumal temple ,Tirukoshtiyur ,Thirkoshtiyur ,Perumal ,temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்...