×

தனியார் குடோனில் 10 ஐபோன்களை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது

புழல்: புழல் பகுதியில் செயல்படும் தனியார் குடோனில், ஐபோன் மற்றும் செல்போன்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், ஏசி உள்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் வைக்கப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த குடோனில் உள்ள மின்சாதன பொருட்களின் இருப்பு எண்ணிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன், மேலாளர் மகேந்திரன் (46) ஆய்வு செய்தார். அப்போது, 10 ஐபோன்கள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து புழல் போலீசில் கடந்த 3 நாட்களுக்கு முன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குடோனில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒப்பந்த ஊழியர்களாக வேலைபார்த்த சோழவரத்தை சேர்ந்த டில்லிபாபு (22), தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் (25), இதயதுல்லா (24) ஆகியோர் ஐபோன்களை திருடியது தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்து, 10 ஐபோன்களை பறிமுதல் செய்தனர்.

 

The post தனியார் குடோனில் 10 ஐபோன்களை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...