×

செங்கல்பட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி தணிகாவிற்கு அக்.20ம் தேதி வரை நீதிமன்ற காவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி தணிகாவிற்கு அக்.20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாமண்டூரில் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது ரவுடி தணிகாவை சுட்டுப் பிடித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைத்த தணிகாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த தணிகா என்கிற தணிகாசலம் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து செங்கல்பட்டு தனிப்படை போலீசார் தணிகாவை கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடி தணிகாசலத்தை போலீசார் சுட்டுப்பிடித்தனர். படுகாயம் அடைந்த ரவுடி தணிகா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரவுடி தணிகாவிற்கு அக்.20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைத்த தணிகாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறது.

The post செங்கல்பட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி தணிகாவிற்கு அக்.20ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Tanika ,Chengalpattu ,Mamandur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...