×

அக்.20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல், அக். 14: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.20ம் தேதி நடைபெறவுள்ளது. என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்.20ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள், அரசின் மானியத் திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளும், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post அக்.20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindir ,Dindigul Collector ,Office ,Farmers' Gathering ,Dinakaraan ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...