கரூர்: கரூர் வெங்கமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் வெங்கமேட்டில் இருந்து இனாம்கரூர் செல்லும் சாலையோரம் பெரியகுளத்துப்பாளையத்தில் பராம்பரியமாக மீன் மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வந்தது. இந்த மீன்மார்க்கெட்டில், டேம் மீன், ஆற்று மீன் மற்றும் கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த மீன் மார்க்கெட் வளாகத்திற்கு வந்து தேவையான மீன் வகைகளை வாங்கிச் சென்று வந்தனர். இந்நிலையில், இந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் வளாகம் பழுதடைந்த காரணத்தால் அவை அகற்றப்பட்டு, இதன் அருகில் புதிதாக மீன் மார்க்கெட் வளாகம் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
The post கரூர் வெங்கமேடு பகுதியில் மீன் மார்க்கெட் கட்டும் பணி appeared first on Dinakaran.