பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 15,606 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. நேற்று 15,547 கனஅடியாக சரிந்துள்ளது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம், 36.89 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 10.54 டிஎம்சியாக உள்ளது.
The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.