×

நோய் குணமாகாததால் விரக்தி விஷமருந்திய தாய்,மகன் சாவு: தந்தை உயிர் ஊசல்

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன்(70) இவரது மனைவி சிவகாமி (60). மகன் தினேஷ் (36). மூத்த மகன் செந்தில் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் குணமடையாததால் குடும்பத்தினர் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் 3 பேரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் உயிருக்கு போராடிய மூவரையும் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார். இந்நிலையில் நேற்று காலை தாய் சிவகாமியும் உயிரிழந்தார். மோகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post நோய் குணமாகாததால் விரக்தி விஷமருந்திய தாய்,மகன் சாவு: தந்தை உயிர் ஊசல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mohan ,Srirangam Melavasala ,Sivakami ,Dinesh ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு