×

ரூ.2,000 அபராதத்தை எதிர்த்த ரோஹிணி தியேட்டர் மனு தள்ளுபடி

சென்னை: ரூ.2,000 அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து ரோஹிணி திரையரங்கு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2022 பொங்கலன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு காட்சி கூடுதலாக திரையிட்டதால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஓடிடி போன்றவற்றால் தியேட்டர் பாதிப்புக்குளாகும் நிலையில் அரசு கட்டுப்பாடுகள் மேலும் இழப்பை ஏற்படுத்தும். கடைகள், நிறுவன சட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் திரையிட முடியும் என்ற அடிப்படையிலேயே அதிகாலை காட்சி திரையிடப்பட்டது என திரையரங்கு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் சினிமா காட்சிகளை திரையிட முடியாது என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

The post ரூ.2,000 அபராதத்தை எதிர்த்த ரோஹிணி தியேட்டர் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Rohini Theater ,Chennai ,Pongal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...