×

அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் விலை உயர்வு

 

அரவக்குறிச்சி, அக். 13: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய் விலை கூடியுள்ளது. அரவக்குறிச்சி, ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகிறது. இப்பகுதி முருங்கைகாய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி முருங்கைக்காய்களுக்கு தனி மவுசு உள்ளது.

ஆகையால் ஈசாத்தம், மலைக்கோவிலூர், இந்திராநகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பு வைப்பார்கள். இந்நிலையில் இப்பகுதி முருங்கைக்காய் மொத்த வியாபாரிகள் வாங்கி அனுப்பப்படும் மகராஷ்ட்ரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு முருங்கைக்காய் வாங்கி விநியோகிக்கும் மொத்த வியாபாரிகள் இங்கு வாங்குவதில்லை. ஆகையால் வரத்து அதிகரித்து விலை கிழே ரூ.5 க்கு விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் காய்களை பறிப்பதற்கு கொடுக்கும் கூலி கூட கிடக்கவில்லை. இதனால் கால்நடைகளுக்கு தீவனமாக இருந்தது.இந்நிலையில் இந்த வாரம் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய் விலை கூடியுள்ளது. கிலோ ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய்கல் தற்போது கிலோ ரூ. 25க்கு விற்பனையாகிவருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Esanantham ,Alamarathupatti ,Shanthappadi ,Kovilur ,Nagam ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...