×

தாந்தோணிமலை சுகாதார வளாகத்தை புதுப்பிக்க கோரிக்கை

 

கரூர், அக். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் பூட்டிய நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாந்தோணிமலை பிரதான சாலையோரம் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த பகுதியினர் இதனை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மோட்டார் பழுது, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சில காரணங்களாக சில மாதங்களாக இவை பூட்டப்பட்டுள்ளது.

மாநகரத்தின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக தாந்தோணிமலை உள்ளது. வெவ்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதுபோன்றவர்களின் பயன்பாட்டுக்காக இதுபோன்ற சுகாதாரவளாகம் செயல்பட்டு வந்தது. தற்போது, அவை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, புதுப்பித்து திரும்பவும் செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post தாந்தோணிமலை சுகாதார வளாகத்தை புதுப்பிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thanthonimalai Health Complex ,Karur ,Dandonimalai ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...