×

கை.களத்தூர் அருகே மாடு தூக்கி வீசியதில் சிறுவன் உயிரிழப்பு

 

பெரம்பலூர், அக்.13: கை.களத்தூர் அருகே அய்யனார்பாளையத்தில் நாய்குரைத்ததால் மாடு தூக்கி வீசியதில் படுகாயமடைந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் அருகேயுள்ள அய்யனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை மகன் ஹாசன் (8). பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் தனது வயலுக்கு சென்று, அங்கு கட்டியிருந்த தங்களது மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளார்.

அப்போது மாட்டின் கயிற்றை தனது இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் எதிரே வந்த நாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியுள்ளது. இதனால் மாட்டின் கயிற்றை இடுப்பில் சுற்றியிருந்த ஹாசன் தூக்கி வீசப்பட்டான். இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹாசன் உயிரிழந்தான். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post கை.களத்தூர் அருகே மாடு தூக்கி வீசியதில் சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kai Kalathur ,Perambalur ,Ayyanarpalayam ,
× RELATED கொடுத்த பணத்தை திருப்பி தராதவரின் பைக்கினை எரித்த மூவருக்கு வலை