×

இடப்பிரச்னையில் தந்தையை தாக்கிய மகன் கைது

 

திருமயம்,அக்.13: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52). இவர் தற்போது திருமயம் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது மகன் முருகானந்தம் (32), இடையே சுமார் ஆறு சென்ட் நிலம் ஒன்று பிரிப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே திருமயம் பகுதியிலுள்ள ஒரு பேக்கரிக்கு சண்முகம் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த முருகானந்தம், அவரது நண்பன் ராங்கியத்தை சேர்ந்த முருகேசன் இருவரும் சண்முகத்திடம் தனக்கு சேர வேண்டிய இடத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளனர்.

அப்போது சண்முகத்துக்கும், முருகானந்தம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகானந்தம் தந்தை எனும் பாராமல் கையில் வைத்திருந்த பைக் சாவியை கொண்டு சண்முகத்தின் முகத்தில் காயப்படுத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த சண்முகம் நான்கு தையலுடன் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து திருமயம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருமயம் போலீசார் முருகானந்தத்தை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.

The post இடப்பிரச்னையில் தந்தையை தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Tags : SUPRAMANIAN ,MALUR NEAR PURUKKOTA DISTRICT SRUMAYAM ,Dinakaraan ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின்...