×

தஞ்சாவூரில் கல்லூரி மாணவரிடம் லேப்டாப், செல்போன் திருட்டு

 

வல்லம், அக்.12: தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த முகமது ஷெரிப் மகன் முகமது பாசில். இவர் தஞ்சாவூர் திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவர் கல்லூரி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். கடந்த 8ம்தேதி அவரது ரூமில் தூங்கிக்கொண்டு இருந்தார். பின்னர் எழுந்து பார்த்தபோது ரூமில் இருந்த லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வல்லம் போலீசில் முகமது பாசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சாவூரில் கல்லூரி மாணவரிடம் லேப்டாப், செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Vallam ,Tirumalaisamutram ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை