×

திருச்சியில் வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது

 

திருச்சி, அக்.13: திருச்சியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கிய நபரை மலைக்கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சி கோட்டை கீழஆண்டாள் புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(44). இவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுப்பிரமணி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பட்டாசு கிப்ட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பதுக்கி வைத்ததாக சுப்பிரமணியை கைது செய்தனர்.

The post திருச்சியில் வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy Trichy ,Malaikot police ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...