- திமுக இளைஞர் உறுப்பினர் முகாம்
- இராசிபுரம்
- ராஜேஸ்குமார்
- திமுக
- நாமக்கல்…
- திமுக இளைஞரணி உறுப்பினர்
- முகாம்
- தின மலர்
ராசிபுரம், அக்.13: ராசிபுரம் நகராட்சி பகுதியில் திமுக இளைஞரணி சேர்க்கை உறுப்பினர் முகாமினை ராஜேஸ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், இல்லம்தோறும் இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான துவக்க நிகழ்ச்சி, ராசிபுரம் நகராட்சி பகுதியில் நடைபெற்றது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாதன். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் விநாயகர்மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி வரவேற்றார். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஓபுளி மோகன், ஆசைத்தம்பி மணிகண்டன், பாண்டியன், லோகசரவணன், சலீம், வார்டு செயலாளர் அமிர்தலிங்கம், இளைஞரணி யோகராஜன், மாணவரணி மணிகண்டன், கிஷோர், சிவக்குமார், மாணிக்கம், செல்வராஜ், கார்த்திக், லவக்குமார், லோக பிரசாத், கவிபாரதி, சிபி, பரத், கிருஷ்ணன், குமார், வெங்கடேஷ், யுவராஜ், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.