×

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை செயலாளராக கார்கலா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kumaraguruparan ,Chennai ,Chief Secretary ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...