×

லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை?: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதி தொகையையாவது டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட லைகா கோரிக்கை விடுத்திருந்தது. பணத்தை செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்; லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை என விஷால் தரப்பு தெரிவித்திருக்கிறது.

The post லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை?: நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Lyca ,ICourt ,Vishal ,CHENNAI ,Dinakaran ,
× RELATED லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த...