×

தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

பெங்களூரு: தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார். தமிழகத்திற்கு அக்.16 முதல் 16 நாட்களுக்கு தினமும் 3,000 கனஅடி நீர் திறக்க குழு பரிந்துரைத்திருந்தது. தமிழகத்திற்கு 3,000 கனஅடி காவிரி நீரை திறக்க குழு பரிந்துரைத்ததற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ள நிலையில் மீண்டும் கர்நாடகா திட்டவட்டமாக கூறியுள்ளது.

The post தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,T.D. K. Shivakumar ,Bengaluru ,Deputy Chief ,Tamil ,Nadu ,T.D. K. ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...