×

சோழவந்தான் அருகே ண்ணீர் தேடி வந்து மயங்கிய புள்ளிமான் னத்துறையினர் மீட்டனர்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே, தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்து மயங்கி விழுந்த புள்ளிமானை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். ழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தில், நேற்று காலை புள்ளிமான் ஒன்று கிடப்பதாக சோழவந்தான் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெங்கடேசன் உள்ளிட்ட வனத்துறையினர் அந்த இடத்திற்கு சென்றனர். அங்கு நாகமலை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளி மான் மயங்கிக் கிடந்தது. இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன், மானுக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.

 

The post சோழவந்தான் அருகே ண்ணீர் தேடி வந்து மயங்கிய புள்ளிமான் னத்துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Nathurians ,Cholavantan ,Cholavanthan ,Dinakaran ,
× RELATED மாரியம்மன் தரிசனம்