×

கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல் அசோகபுரம் ஊராட்சியில் ரூ.91.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்

பெ.நா.பாளையம்: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சியில் ரூ. 91.50 லட்சத்தில் புதிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரங்கம்மாள் காலனி, ஐயப்பன் கோவில் வீதி மற்றும் வட்டமலைபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் ரூ.27 லட்சத்தில் 316 மீட்டரில் புதிய தார்சாலை, அண்ணா மறுமலர்ச்சி திட்டதில் ரூ.63.50 லட்சத்தில் அசோகபுரம் அரசுபெண்கள் உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைபள்ளியில் மாணவ மாணவியர் வசதிக்காக புதிய சைக்கிள் ஸ்டேன்டு, ஊராட்சி அலுவலகம் பின்புறம், சி.எஸ்.ஐ.சர்ச் ரோடு , லட்சுமி நகர் மயானம் சாலை ஆகிய பகுதிகளில் காண்கிரீட் சாலை மற்றும் ஆசிரியர் காலனி அரசு பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டும் பணிகளுக்காக நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

The post கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல் அசோகபுரம் ஊராட்சியில் ரூ.91.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ashokapuram panchayat ,B.N. Palayam ,Ashokapuram ,Tudiyalur, Coimbatore ,First Minister ,Dinakaran ,
× RELATED திருமணமான மூன்றே மாதத்தில் பெற்றோருடன் புதுப்பெண் தற்கொலை